Sunday , June 29 2025
Home / முக்கிய செய்திகள் / மஹாசோன் பலகாயவுடன் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பு

மஹாசோன் பலகாயவுடன் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பு

மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தொடர்புகளை பேணியுள்ளமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மஹாசோன் பலகாய என்னும் அமைப்பின் பிரதானியாக அமித் வீரசிங்க என்ற நபர் செயற்பட்டு வருகின்றார். அண்மையில் இவர் கைதுசெய்யப்பட்டதுடன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரும் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் தொடர்பு பேணியமை தெரியவந்துள்ளது.

திகன, தெல்தெனிய சம்பவங்களின் போது அமித் வீரசிங்கவுடன் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தனர.; எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv