அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நகர்வுகளில் இலங்;கையில் எவ்வித முன்னேற்றங்களும்; ஏற்படாமையால் உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி விசேட உரையை நிகழ்த்தவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹ{சைன் நேற்று, வாய்மூல அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
இனம், மதம் மற்றும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைகளால் இலங்கையில் நாடளாவி ரீதியாக அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன்.
இலங்கை அரசு நிலைமாறுகால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும். அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் இல்லாமையையிட்டு கவலையடைகிறேன். பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.
இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன். இதுதொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன்.” என்றார்.





