Tuesday , June 10 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி

ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி

ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி

ஹாங்காங்கில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது கைவிலங்கிடப்பட ஆர்ப்பாட்டக்காரரை அடித்ததற்காக கடந்த வாரம் ஏழு போலீஸாருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை பல அதிகாரிகள் கோபப்படுத்தியது. இது நியாயமற்றது என்றும், மிகவும் கடுமையானது என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) இரவு போலீஸ் பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 33 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக நிகழ்வை ஒருங்கிணைத்த போலீஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து அவர்கள் மீதான களங்கத்தை போக்க உதவப்போவதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாக அங்குள்ள செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …