ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நேரடி ஒளிபரப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பும் இன்று வெளியாவதால் தீர்ப்புக்கு பின்னர் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருக்கும் வகையிலும் போலீசார் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு தயாரான ஆர்.கே.நகர். அதிகாலையிலேயே குவிந்த வாக்காளர்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும், வாக்காளர்களும் வாக்குப்பதிவுக்கு தயாராகி உள்ளனர். தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இன்று ஆர்.கேநகர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கும் முன்னதாகவே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *