15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்
புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழக ஆளுநர், பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தித்திருப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைக்கு முடிவு கட்டும் வகையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் கொடுத்துள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம், சட்டமன்றத்தில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ஆளுநர் காலதாமதமாக ஆட்சியமைக்க அழைத்திருந்தாலும் அதனை தி.மு.க. வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தது ஏன்? என தெரியவில்லை, 15 நாட்கள் அவகாசம் அளித்திருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.