Sunday , June 29 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்

தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது.

தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கப்புரியாக திகழ்ந்து கொண்டிருந்தால், எங்களால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியாது.

பாகிஸ்தானின் தற்போதைய நிலை உடனடியாக மாற வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி வரும். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அமைதிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பவேண்டிய நேரம் இது’ என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவான பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் விதமாகவும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தான் தொடர்பான டிரம்ப்பின் கருத்தை வைத்துப் பார்க்கையில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அதற்காக பல தியாகங்களை செய்ததிலும், அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையை நிலைநாட்டுவதிலும் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுவதுடன் முதலிடம் வகித்து வருகிறது என்று நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையை நிலைநாட்ட முயற்சிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பாதகமாக அமைந்து விட கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …