புதிய வெளிவிவகார அமைச்சர் குறித்து அரசுக்கு கடும் வாக்குவாதம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சராக இருந்து ரவி கருணாநாயக்க நேற்று தனது பதவியை இராஜனாமா செய்ததையடுத்து குறித்த அமைச்சு பதவியை வெற்றிடமாகியுள்ளது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் அரசால் இறுதி முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது.
திலக் மாரப்பன தற்காலி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாளும் தற்போது அந்த நிலைப்பாடு கைவிடப்படுள்ளது. முன்னதாக அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, சரத் அமுனுகம உள்ளிட்டவர்களின் பெயர்களும் அடிப்பட்டிருந்தது.
ஆனால், வெளிவிவகார அமைச்சு ஐ.தே.கவுக்கு உரியது என்ற அடிப்படையில் சு.கவின் ஒருவருக்கு வழங்க முடியாது என்று ஐ.தே.கவினர் திட்டவட்டமாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் தற்போது சாகல ரட்ணாயக்க பெயரும் வெளிவிவகார அமைச்சர் பெயர் பட்டியலில் உள்ளதாக அறிய முடிகிறது.