வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்வதாக நாடாளுன்றில் அறிவித்தார்.
நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நோக்கம் நாட்டில் இஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகும். மீண்டும் பழைய யுகத்தை நோக்கி செல்ல முடியாது.
32 வருடங்கள் நான் உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியக்கும், நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவே எனது பதவியை இராஜனாமா செய்கிறேன். மாறாக எவருக்கும் பயந்து அல்ல என்று தெரிவித்தே இராஜனாமா செய்வதாக அறிவித்தார்.
அத்துடன், விசாரணைகள் முடிவடையும் வரை தான் பின்வரிசை எம்.பியாக அமர்வதாகவும், எனது விசாரணைகள் போன்று முன்னாள் அரசு மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல்களை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.