பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்களின் அடிப்படையிலேயே அவர் பற்றிய முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்குமென அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்பே இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிணைமுறி மோசடி விவகாரத்தில் ஒருசில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் கட்சி நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது என கருத்து தெரிவித்திருப்பதாகத் தெரியவருகின்றது.