ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார்.

ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *