உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு: குவைத்தில் இருந்து ஈரான் தூதர்கள் வெளியேற்றம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி குவைத்தில் இருந்து 15 ஈரான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குவைத்தில் 2015-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடத்தவும், உளவு வேலை பார்க்க இவர்களுக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து குவைத்தில் இருந்து அலிரேசா எனாய்தி உள்ளிட்ட 17 தூதர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதை குவைத் மந்திரி ஷேக் முகமது அப்துல்லா அல்சபா உறுதி செய்துள்ளார்.

வேறு தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். ஆனால் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *