கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது,

‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் கஸ்தூரி உள்பட பல திரையுலகினர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *