தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,5) சென்னை வருகிறார்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் முடிந்த பின், மஹாராஷ்டிர மாநிலம் கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(அக்.,5) பிற்பகல் சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், அவர் புதிய தமிழக கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *