நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர், இரட்டை மடிவலைகளை பயன்படுத்துகின்றனர் என கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 3 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *