அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும்.

கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *