​தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2.096 கோடி வழங்க பரிந்துரை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
​தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி வழங்க பரிந்துரை!

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவிவருவதால் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்தது. இதையடுத்து, தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 2 ஆயிரத்து 96 கோடி ரூபாய் வழங்க மத்திய குழு உள்துறை அமைச்சத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி, தமிழகத்திற்கு ஆயிரத்து 748 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இக்குழுக்களின் அறிக்கை தொடர்பாக நாளை நடக்கும் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இதனிடையே மத்திய குழு பிரிந்துரை செய்துள்ள நிவாரண நிதி போதாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News