​முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வலது கண்ணில் புரை இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் பழனிசாமிக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது கண்ணில் புரை அகற்றப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இன்னும் 4 நாட்கள் முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதே போன்று, கடந்த மாதம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில், அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *