அம்மாவின் சாதனைகளை சொல்லி நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஓட்டுவேட்டை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆர்.கே.நகர் தொகுதியில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மறைந்த முதல்வர் அம்மாவின் சாதனை திட்டங்களை எடுத்து கூறிய அவர் அந்த திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல வளர்ச்சி பணிகளும் தொடர வேண்டுமானால் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், அனைத்து தர மக்களுக்கும் அம்மாவின் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

வீடு வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் படித்தவர், பன்பாளர், இந்த தொகுதியை முன் மாதிரியாக கொண்டு வரக்கூடிய திறமை படைத்தவர், அவருக்கு வாக்களித்து தேர்வு செய்தால் இப்பகுதிக்கு நல்லது. மற்றவர்களுக்கு வாக்களித்தால் அது பயன்படாது என்று எடுத்து கூறினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், பச்சைமால், வசந்தி முருகேசன், சந்தானம் உள்பட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *