பெரா வழக்கு: தீர்ப்பை திரும்ப பெறக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு வாபஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை டி.டி.வி.தினகரன் வாபஸ் பெற்றுள்ளார்.

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே எழும்பூர் கோர்ட்டில் இன்றைய விசாரணையின்போது டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை மே 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *