சைட்டம் பற்றிய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சைட்டம் பிரச்சினை பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருப்பதாக அக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ள மேலதிக விவரங்களாவன:-

“ஜனாதிபதி எங்களுக்கு வழங்கியிருந்த கால எல்லைக்குள் அறிக்கையை அவருக்கு சமர்ப்பித்து விட்டோம். எனவே, இந்த அறிக்கை இன்னும் முடியவில்லை என இலங்கை அரச மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை . நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்தபின் ஜனாதிபதியின் செயலாளருடனும் இது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினோம். இந்த அறிக்கையை வாசித்தபின் ஜனாதிபதி மேலதிக நடவடிக்கையை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்” – என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *