ஜெனீவா வங்கியில் புலிகளுக்கு கணக்கு, சுவிஸ் புலிகள் தலைவர் தொடர்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சர்வதேச புலிகள் வலையமைப்பின் பெருந்தொகையான நிதி ஜெனீவா நகரிலுள்ள பிரபல வங்கியொன்றில் வைப்பில் உள்ளதாகவும், சுவிட்சர்லாந்திலுள்ள புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவுள்ள அப்துல்லா என்பவர் இந்த வங்கிக் கணக்குகளுக்கு பொறுப்பானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா. காரியாலயத்துக்கு முன்னால், இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜெனீவாவிலுள்ள குறித்த வங்கியின் கணக்கிலிருந்து நிதி பெறப்பட்டுள்ள போதே இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யுமாறு நிதி அனுப்பப்பட்டுள்ளதும் இந்த சுவிஸிலுள்ள புலிகளின் சர்வதேச நிதியிலிருந்து எனவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இன்றை சகோதர தேசிய நாளிதழொன்று தெரிவித்துள்ளது.

5 மில்லியன் டொலர் பணம் சுவிஸ் வங்கியில் இருப்பதாக புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவுக்கான தலைவர் கே. பீ. தெரிவித்துள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *