ஓகி புயல், மீனவர் பிரச்சனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தின் குமரி மாவட்டத்தை மிகவும் கடுமையாக தாக்கியது சமீபத்தில் வந்த ஓகி புயல்.

இந்த புயலின் தாக்கத்தால் பல உயிர்களை பலிகொடுத்து அதிலிருந்து இன்னமும் மீளாமல் உள்ளனர் அந்த பகுதி மக்கள்.

ஆனால் இந்த பிரச்சனையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மத சாயம் பூசியுள்ளார்.

பல ஆயிரம் பேர் இந்த புயலால் காணாமல் போய் உள்ளனர், பல நூறு பேர் இறந்துள்ளனர். பலரும் தங்கள் உடமைகளை இழந்து நாதியற்று நிற்கின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் மீட்பு பணியிலும், நிவாரண பணியிலும் மிகவும் தொய்வடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல இடங்களிலும் மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக திமுக நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தற்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதம் சாயம் பூசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஒகி புயல் வந்தவுடன் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி விரைந்தார், ஆர்எஸ்எஸ் களமிறங்கியது, நிர்மலாசீதாராமன் நேரில் மீனவர்கள் மீட்ப்புப்பணியை முடுக்கிவிட்டார்.

ஒன்றுமே செய்யாமல் நாளை மீனவர்களுக்காக திமுக ஆர்ப்பாட்டம். ஆமாம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஓ அவர்கள் இந்துக்களா என பதிவிட்டு இதிலும், இந்து, கிறிஸ்தவ மத வேறுபாடு காண்கிறார் எச்.ரஜா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *