வட மாநிலத்தவர்களின் புத்தாண்டு உகாதி பண்டிகை – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட மாநிலத்தவர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படும் உகாதி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடெங்கிலும் வாழும் மக்கள் புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடும் இவ்விழாவையொட்டி எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த புத்தாண்டு அமைதியையும், மகிழ்ச்சியையும், வளங்களையும் அருளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உகாதி மற்றும் நவ்ரத்ரா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். சரஸ்வதி, காளி, லட்சுமி ஆகியோரை நோன்பிருந்து வழிபாடு செய்யும் நவ்ராத்ரா விழா நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களையும் நல்கட்டும் என தெரிவித்துள்ளார்.

ஆணவம் மற்றும் கோபத்தை வெல்ல இதைப் போன்ற நோன்புகள் உதவிகரமாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *