காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்புப் போராட்டம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் எடுத்துக்கூறியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஜனாதிபதியை மைத்திரிபாலவை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி செயலத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வருமாறு:- காணாமல்போனவர்கள் காணாமல்போனவர்களின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் […]





