“மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “குப்பைமேடு சரிந்து விழுந்து அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இலங்கையிலேயே […]





