சமீபத்தில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். காவிரி விவகாரம் மற்றும் வைகோவை பற்றிய அவதூறு மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்தார். அதன்பின், சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
Tag: மரணம்
மது போதையில் மயங்கி நீரில் மூழ்கினார் ஸ்ரீதேவி?
நடிகை ஸ்ரீதேவி துபாய் ஹோட்டலில் உள்ள அறையில் மது போதையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவரது […]
ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல் கூறியது என்ன தெரியுமா?
இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்கள் இணைந்து நடித்தவரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவு […]
தாய் இறந்தது கூட தெரியாமல் அருகில் தூங்கிய மகன்
தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல், 5 வயது சிறுவன் அருகிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் உலுக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிப்பவர் சமீனா சுல்தானா. இவரின் கணவர் அயூர் 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்துவிட்டார். இதனால், அவர் தன்னுடைய 5 வயது மகனோடு வசித்து வந்தார். அந்நிலையில், சமீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அயூப் அவரை உஸ்மானிய மருத்துவமனையில் […]
கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்
மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலையாள ஆக்ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் […]
பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (64) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு இன்று அதிகாலை திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே […]
அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் […]
முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனு
முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தபப்ட்ட வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்
சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: தொண்டர்கள் வருமானத்திற்கு கஷ்டப்படும் போது, பொது செயலாளருக்கு ரூ. 17 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினராக டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. மிடாஸ் நிறுவனத்தை நடத்தி கொண்டு சசிகலா பொது செயலாளராக இருக்கலாமா? சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள். […]





