பிரதமர் மோடி குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்ததாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், தமது முகநூல் பக்கத்தில், பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பாரதிய ஜனதா கட்சியினர் எச்சரித்தும், அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர் அளித்த புகாரின் பேரில், திருமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். […]





