Tag: பதுளை

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் […]

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தெற்கு அந்­தமான் தீவு­களில் தற்­போ­தைக்கு தாழ­முக்கம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. அத்­தா­ழ­முக்கம் எதிர்­வரும் தினங்­களில் உக்­கி­ர­ம­டைந்து மத்­திய வங்­காள விரி­கு­டா­வி­னூ­டாக இந்­தியா நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க […]

கொட்டகலைக்கு அருகாமையில் ரயில் விபத்து

கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் ரயில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை சேதத்திற்குள்ளானது. இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய […]