Tag: த.குருகுலராஜா

விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரை பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் குருகுலராஜா!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரையில் தனது பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் த.குருகுலராஜா கையெழுத்திடவில்லை என்பதால், இதனைக் கவனத்திலெடுக்கத் தேவையில்லை என்று கட்சித் தலைமை கூறியுள்ளது எனத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் விசாரணை அறிக்கை […]