மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது. இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Tag: இராணுவத்தினரின்
யாழில் இராணுவத்தினரின் யுத்த வெற்றி விழா
யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமடைந்த “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி” வடமாகாண நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று முற்பகல் பலாலியில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்கள், வடமாகாண சபை திணைக்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட பாதுகாப்பு […]
இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் […]





