Tag: World news

சேமிப்புக் கணக்கில் கட்டுப்பாடு-ரிசர்வ் வங்கி

மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி

மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 […]

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது […]

மு.க. ஸ்டாலின் தி.மு.க.

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் […]

திமுக எம்எல்ஏக்களும்-ஸ்டாலின்

சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின்

சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் […]

ரகசிய வாக்கெடுப்பு திமுக

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் மைக், இருக்கைகளை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளி காரணமாக அவையை 1 மணி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை […]

விக்னேஸ்வரன்- ரவூப் ஹக்கீம்

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்

விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமது கட்சி ஈடுபட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட,கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். […]

செங்கோட்டையன்-அமைச்சரவை பட்டியல் வெளியீடு

செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். […]

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும்

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், […]

பாடசாலையை புறக்கணித்து

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான […]