முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து […]
Tag: World news
சஜித்கு விசேட அழைப்பு
சஜித்கு விசேட அழைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகியிருக்கும் பலர், நாட்டிற்கு சாதகமான முயற்சிகளில் ஈடுபட தயாராக இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார். கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் உரையாடலின் மூலம் […]
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி […]
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை […]
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம்
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம் வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு […]
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் […]
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து […]
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு […]
UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்
UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]





