எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி […]
Tag: today Tamil news
பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா
பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்கிறார் என அமித் ஷா கிண்டல் அடித்துள்ளார். பாரதிய ஜனதா அகில இந்திய தேசிய தலைவர் அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் […]
ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம்
ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நேரத்தின் படி நேற்றைய தினம் மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ் தமிழ் […]
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முட்டாளாக்க முடியாது : உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார […]
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், […]
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால்
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார். அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் பின்னடைவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் பின்னடைவு தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் தொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸை அவர் […]
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கு கோரும் நடைமுறையை ரகசியமாக நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி நேரில் வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வலியுறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை […]
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார். […]
யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா
யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரேனும் ஒரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பொறுப்புக்கூறலை விட தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக சரிசனை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிடடுள்ளார். அத்தோடு, தேசிய நல்லிணக்கத்திற்கான கொள்கையும் புதிய அரசியலமைப்புமே தற்போது […]





