Wednesday , June 25 2025
Home / Tag Archives: tamil newspapers (page 11)

Tag Archives: tamil newspapers

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இரட்டைப் படுகொலை ஏறாவூர்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு ஏறாவூரில் தாய் மற்றும் மகள் என இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த ஆறு பேரும் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏறாவூர் நகர …

Read More »

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் - சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன் தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் …

Read More »

காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்

காணியை அடையாளம்

காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம் கேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன …

Read More »

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு

மைத்திரி அநுர குமார

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு தனது நண்பரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் சர்ச்சை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனியாக இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. சைட்டம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாதென தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில் அவராலேயே நியமிக்கப்பட்ட குழு வலியுறுத்தியிந்த நிலையில் இன்று ஏன் அவர் …

Read More »

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை

கேப்பாபுலவு காணி மீட்பு

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை கேப்பாபுலவு கிராம மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாவது நாளாகவும் சிவலிங்க பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பகுதியிலுள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை என்பவரே இந்த பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார். …

Read More »

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம்

கேப்பாபுலவு போராட்டம்

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத …

Read More »

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க, பா.ஜ.க.

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து …

Read More »

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வம்

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் …

Read More »

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன்

இசை அமைப்பாளர் கங்கை அமரன்

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக இசை அமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீதான அதிருப்தியை தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு …

Read More »

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் வீடு முன்பு அவரது ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, அண்ணா நகர், கோயம்பேடு …

Read More »