Tag: tamil nadu

வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். […]

ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது!

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார். பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் […]

ரவூப் ஹக்கீம்

விடுதலைப் புலிகளை புகழும் ஹக்கீம்

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை […]

கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசையில் வாழும் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர்கள் அகற்றப்படுவதன் மூலம் 400 ஏக்கர் காணியை பெற்று, வர்த்தக மற்றும் பொது தேவைகளிற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாலிகாவத்த புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், ப்ளூமண்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்கள காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இந்த திட்டத்தின் கீழ் அகற்றப்படவுள்ளனர். குடும்பங்களை அகற்ற 170 […]

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்!

கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் தவிசாளர்கள் நகர முதல்வர்கள், மாநகர மேயர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவின் அழைப்பினை புறக்கணிப்பதென மட்டக்களப்பில் இடம்பெற்ற […]

யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு

மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில் கடதாசிப் பெட்டி ஒன்றிலிருந்து தமிழன் குண்டு எனச் சொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தயாரிப்புக் குண்டு ஒன்றும் ஆர்.பி.யி குண்டு ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. குறித்த குண்டை வெடிக்கவைப்பதற்கு தர்மபுரம் […]

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து […]

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி […]

முக்கிய கட்சிகளை பின்தள்ளினார் கமல்ஹாசன்?

இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை விட முன்னிலை வகிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் […]