ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி ஓட்டளிக்கும் முன்னர், ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஊழலுக்கு எதிராக…: உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டு வரவே நமது போராட்டம் […]
Tag: tamil nadu
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு […]
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி தன்னை ஓரம் கட்டி விட்டதாக கூறி அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணா விரைவில் பாஜகவுக்கு வருவார் என கர்நாடக மாநில பாஜக […]
சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு
சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 28-ம் தேதி சென்னை காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது. இந்நிலையில், சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் அதாவது 90% […]
சிவகங்கை மாவட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
சிவகங்கை மாவட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம் சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் தொல்பொருள் ஆய்வுகளை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக. மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் இணைந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகேஷ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள […]
கோவா,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது
கோவா,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது கோவா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கும், பஞ்சாப்பில் காலை 8 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவா : முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று […]
ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]
எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்
எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன் கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார். கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்வையிட்ட திருமாவளவன், வாளியில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். செய்தியாளர்களிடம் […]
மேற்குவங்க முதல்வர் மம்தா – அறிவுரை தேவையில்லை, தேவையான நிதியை வழங்குங்கள்
அறிவுரை தேவையில்லை, தேவையான நிதியை வழங்குங்கள் – மேற்குவங்க முதல்வர் மம்தா மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவுரை தருவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். வாய் ஜாலம் வேண்டாம்: கோல்கட்டாவில் நடந்த கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிராமப்புறங்களில் […]
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல்
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் […]





