ஜூன் மாதத்துக்குள் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு கடிதம் ஜூன் மாதத்துக்குள் முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை உள்கட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை …
Read More »மக்களவையில் இன்று குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
மக்களவையில் இன்று குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம் மக்களவையில் இன்று குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசு தலைவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, இ.அகமது எம்.பி.க்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக …
Read More »தேர்தலில் மருமகனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் முடிவு
தேர்தலில் மருமகனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் முடிவு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மருமகனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் முடிவு செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தனது 4-வது மகள் …
Read More »பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? காங். மீது மோடி பாய்ச்சல்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? காங். மீது மோடி பாய்ச்சல் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? என காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அன்று பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது …
Read More »சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன்
சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன் ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது …
Read More »ஈரோஸ் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு
ஈரோஸ் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு ஈரோஸ் கட்சியின் வட.மாகாண தலைமை அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனகபுரம் வீதியில் அமைந்துள்ள குறித்த தலைமையகம் இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் இரா. பிரபாகரனால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம், ‘இன்னமும் அரசியல் சக்தி தமிழ்தேசிய கட்சி என்று ஏமாற்றுகொண்டிருக்கின்றோமே தவிர அதற்கான தீர்வுகள் …
Read More »காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம்
காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம் ராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதோடு, புதுக்குடியிருப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரி இம்மக்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய …
Read More »தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும்
தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும் உத்தேச தேர்தல் முறைமை சீர்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்கான சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்த தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் …
Read More »போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு
போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் போரின்போது கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போரில் தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என சுமார் 30 பேருக்கான செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. அமெரிக்காவின் நிதி உதவியுடன், கண்டி மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தினால் இந்த உதவித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த …
Read More »இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை
இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை சொந்த காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் மக்கள் இரவு பகலாக பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் இன்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today