Tag: news online

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம்

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து குடியேறுபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதை நடை முறைப்படுத்த அதிவிரைவு நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். எல்லையின் சில பகுதிகளில் […]

சிரியாவில் துருக்கி படையினர் நுழைவு

சிரியாவில் அல் பாப் நகருக்குள் துருக்கி படையினர் நுழைவு

சிரியாவில் அல் பாப் நகருக்குள் துருக்கி படையினர் நுழைவு சிரியா நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது துருக்கி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல் பாப் நகரம், ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் இருந்து வருகிறது. இந்த நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் […]

சசிகலா ஆதரவாளர்கள்

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு இன்று காலை முதலே சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலலிதா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, இன்று மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளார் என தகவல் வெளியானது. முதல்வர் பன்னீர்செல்வம், ஏழு நாட்களுக்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார். பன்னீர்செல்வம் […]

முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம்

முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார்

முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார்.                         […]

முஸ்லிம் மக்களுக்கு

முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன்

முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றால், முஸ்லிம் மக்களுக்கென சமஷ்டிக் கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டினை […]

சென்னை ஐகோர்ட்டில்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுகுறித்து விடுதியில் […]

சர்வஜன வாக்கெடு

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளை கழுவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி […]

சமஷ்டி மனோ கணேசன்

சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் – மனோ கணேசன்

சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஹமத் அலி ஜின்னாவை போல 1948 ஆம் ஆண்டு பிடிவாதமாக நின்று தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அல்லது அன்று தென்னிலங்கை […]

கேப்பாபிலவு மக்களின் போராட்டம்

தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்

தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் […]

தலைமை செயலகத்தில்

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். […]