நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்துவிட்டு எர்ணாகுளம் செல்கிறார், அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாகச் செல்லாத நான், எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வெழுதப்போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார். நீட் தேர்வுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெளிமாநிலத்தில் நீட் தேர்வெழுத மாணவர்கள் […]





