ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், ஆளுந்தரப்பு சார்பில் கலந்துகொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரினார். அதற்கு பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்ட சபாநாயகர், …
Read More »அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற நடவடிக்கை: நீதியமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காலதாமதமாவதாகவும், …
Read More »மோடி இலங்கை வருகை
மோடி இலங்கை வருகை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய …
Read More »