உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிட்டப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் விதானகமகே நந்தராஜா மனுவைத் தாக்கல் […]





