வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். அத்தோடு அவர் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக …
Read More »அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும், இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உற்சாகத்தை வழங்கி வருகின்றதே ஒழிய, அவர்களுக்கு இதுவரையும் தண்டைனையை பெற்றுக்கொடுப்பதற்கான …
Read More »