முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என்றும், எந்தவொரு படைத்தளபதியையும் நல்லாட்சி அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் 23/2இந்த கீழ் மஹிந்த அணியான பொது எதிரணியின் எம்.பி. தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் அரசின் மேற்படி நிலைப்பாட்டை …
Read More »பணிப்பகிஷ்காிப்பை அறிவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் …
Read More »சைட்டத்தை மூட இடமளியோம்! – அரசு திட்டவட்டம்
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஓர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் என்பதால் அதை எக்காரணம் கொண்டும் மூடுவதற்கு அரசு இடமளிக்காது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “சைட்டம் பிரச்சினை குறித்து கலந்துரையாட இலங்கை வைத்தியர் சங்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதிலும் அவர்கள் அந்த அழைப்பை அசட்டை செய்துவிட்டு மாணவர்களைப் …
Read More »