Monday , June 2 2025
Home / Tag Archives: ரவூப் ஹக்கீம்

Tag Archives: ரவூப் ஹக்கீம்

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !

ரணில் ஒரு துரோகி-ரவூப் ஹக்கீம்

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி …

Read More »

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது

ரவூப் ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More »

மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! – ஹசனலி திட்டவட்டம்; முஸ்லிம் கூட்டமைப்பே ஒரே இலக்கு என்றும் தெரிவிப்பு 

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்.”  – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்தார். ஹசனலிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் …

Read More »

கிழக்கு மாகாணத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பு, மு.கா. தயார்! – ஹக்கீம் அறிவிப்பு

  “மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புப் பற்றிப் பேப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளன.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் …

Read More »

சம்மாந்துறை நௌசாத்தை மு.காவில் இணைக்கப் பேச்சு! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று  நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு  மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்தவகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில …

Read More »

புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகியிருப்பார் ரணில்! – ஹக்கீம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என்றும், எனினும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அத்திட்டத்தை அவர் நிராகரித்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:- “1977 …

Read More »

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஹக்கீம் தெரிவிப்பு

“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.” – இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்ததாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. தமிழ்  முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியாக அந்த ஆட்சி இருக்கவில்லை …

Read More »

புதிய அரசியலமைப்பே தேவை, திருத்தம் அல்ல : ஹக்கீம்

தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் …

Read More »

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்று கூடுகின்றது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் …

Read More »