Sunday , June 29 2025
Home / Tag Archives: ரவி கருணாநாயக்க

Tag Archives: ரவி கருணாநாயக்க

பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள்

அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் …

Read More »

திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன. ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலை அடுத்து வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படும் வரையில், இந்த அமைச்சை சிறிலங்கா அதிபரே கவனித்துக் கொள்வார். அதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கு …

Read More »

சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்தார் ரவி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்வதாக நாடாளுன்றில் அறிவித்தார். நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நோக்கம் நாட்டில் இஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகும். மீண்டும் பழைய யுகத்தை நோக்கி செல்ல முடியாது. 32 வருடங்கள் நான் உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியக்கும், நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவே எனது பதவியை இராஜனாமா செய்கிறேன். மாறாக எவருக்கும் பயந்து அல்ல என்று தெரிவித்தே இராஜனாமா செய்வதாக அறிவித்தார். …

Read More »

அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமா? இல்லையா? – சபாநாயகர் தீர்மானம் நாளை அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார். இது விடயம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அவர் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல …

Read More »

ரவி குறித்து ஜனாதிபதியின் முடிவு இரண்டு வாரத்தில் வெளியாகும் என்கிறது சு.க.

Maithripala Sirisena

“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில்  இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்”  என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்  யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிணைமுறி மோசடி தொடர்பில் …

Read More »

பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது. வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு …

Read More »

ரவி பதவி விலகவேண்டுமென கபே அமைப்பும் வலியுறுத்து!

பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “பிரச்சினை உருவாகியுள்ள இந்த வேளையில் அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருப்பது விசாரணைகளுக்குப் பாதகமாக அமையும். ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசுக்கு வாக்களித்த 62 இலட்ச மக்களின் …

Read More »

ஆணைக்குழுவுக்கு ரவி தரும் விளக்கங்களின் பின்னரே அவர் பற்றிய முடிவை எடுக்கும் ஐ.தே.க.!

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்களின் அடிப்படையிலேயே அவர் பற்றிய முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்குமென அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்பே இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. …

Read More »

ரவியின் கருத்துகள் குழந்தைத்தனமானவை! – சாடுகிறார் விமல் வீரவன்ஸ

“பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் குழந்தைத்தனமானவை”  என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எம்.பி. விமர்சித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “2015 ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி மலர்ந்துவிட்டதாக மார்தட்டியவர்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையென நாம் சுட்டிக்காட்டினோம். எமது கருத்தை நம்பாது மக்களையும் அவர்கள் தவறாக வழிநடத்தினர். எனினும்,  இன்று உண்மை அம்பலமாகியுள்ளது. இதனால், …

Read More »

ரவிக்குப் பலப்பரீட்சை! – நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு; சு.க. அமைச்சர்களும் கைவிரிக்கும் நிலை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்திடம் குறித்த பிரேரணையைக் கையளித்த மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள், அது விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விநியோக மோசடி மற்றும் சொகுசு வீட்டு விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களை …

Read More »