மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் நாள் குப்பை மேடு சரிந்த விபத்தில் 32 பேர் மரணமாகினர். மேலும் 30இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக …
Read More »அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஏற்பதாக ரணில் தெரிவிப்பு
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனியும் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல பகுதியில் காணப்படும் இராட்சத குப்பைமேடு குடியிருப்புக்கள் மீது சரிந்ததில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த …
Read More »மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி
மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இவ் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குப்பைமேடு சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க …
Read More »குப்பை மேடு சரிவு விபத்தில் 28 பேர் பலி: 30 பேர் மாயம்
புதுவருடப் பிறப்பு தினமான கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணியளவில் வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த பாரிய குப்பை மேட்டு மலையின் ஒரு பகுதி வீடுகள் மீது சரிந்தது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் குப்பையில் மூடப்பட்டதோடு உடனடியாக மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 14ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை இடம்பெற்ற மீட்புப் பணிகளில் 28 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் …
Read More »