உடலளவில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாகவே இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. இதனை பார்க்காமல் உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.3ம் தேதி, ‘சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ‘மாற்றத்தின் மூலம் நிலையான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை அனவருக்கும் உருவாக்குவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. […]





