நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் …
Read More »