முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More »