“நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின் எங்களது அடுத்தகட்ட முடிவுகளைச் சர்வதேசம் ஆதரிக்கும். நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசித்தான் தீர்மானிக்க முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். […]





